ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு அண்மையில் பல்வேறு தளர்வுகளை வெளியிட்டிருந்தது. அந்த தளர்வுகளில் ஹோட்டல்கள் திறந்து இருப்பதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உணவகங்களில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட தளர்வுகளில் உணவகங்களில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசின் இந்தத் தளர்வை தமிழகத்திலும் அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Show comments