சேலம் பெரியார் பல்கலையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் பிப். 5- ல் வெளியிடப்பட்டது. பல்கலையுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் படித்து, ஆன்லைன் மூலம் தேர்வை எழுதிய, இளநிலை இரண்டாம் ஆண்டு, இறுதியாண்டு, முதுநிலை இறுதியாண்டு மற்றும் படிப்புக்காலம் முடிந்து சென்ற மாணவர்களின் தேர்வு முடிவுகளை பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டார்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற பெரியார் பல்கலை இணையதள மூலமும், இணைவு பெற்ற கல்லூரிகளின் இணையதளம் மூலமும் அறிந்து கொள்ளலாம்.