Skip to main content

பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., எம்.டெக். பாடப்பிரிவுகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம்!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

periyar university MBA, M.TECH AICTE permission granted

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., எம்.டெக்., பாடப்பிரிவுகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

சேலத்தில், கடந்த 1997- ஆம் ஆண்டில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயல்கல்வி பயின்று வருகின்றனர். 

 

மேற்சொன்ன நான்கு மாவட்டங்களில் உள்ள 101 அரசு, தனியார், நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. இப்போது 28 துறைகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ளன. 

 

தொழிற்சார்ந்த பாடப்பிரிவுகளான எம்.பி.ஏ., எம்.டெக்., ஆற்றல் தொழில்நுட்பம் (எனர்ஜி ஸ்டடீஸ்) ஆகிய படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இப் பாடப்பிரிவுகளுக்குத் தற்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு எனப்படும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம், தொழிற்படிப்புகளை படிக்க விரும்பும் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மாணவர்களை பெரியார் பல்கலைக்கழகத்தை நோக்கி வரச் செய்யும் எனத் தெரிகிறது.

 

இது தொடர்பாக பல்கலைக்கழக வட்டாரத்தில் கேட்டபோது, ''ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் கிடைத்துள்ளதன் மூலம் இத்துறைகளில் பயிலும் மாணவர்கள் அகில இந்திய அளவில் உயர்கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் நிதி வழங்கும் முகமைகளுக்கு திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்து நிதியுதவி பெற வாய்ப்பாக அமையும்.

 

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் வழிவகுக்கும். வெளிநாட்டு மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழில்சார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகளைப் பெறவும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் அடித்தளமாக அமையும்,'' என்றனர்.

 

http://onelink.to/nknapp

 

ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகம் வழங்கி வரும் எம்.சி.ஏ. பாடப்பிரிவுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வங்கீகாரம் கிடைக்க முயற்சிகளை மேற்கொண்ட பேராசிரியர்களை துணைவேந்தர் குழந்தைவேல் பாராட்டினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.