ADVERTISEMENT

சத்யராஜூடன் இணைந்து நடனமாடிய பேரறிவாளன்! 

03:09 PM Jul 31, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

30 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் விடுதலையாகியுள்ள பேரறிவாளன் தனது பெற்றோரின் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் 'குயில் 80 அற்புதம் 75' என்ற தலைப்பில் பிறந்தநாள் விழா நேற்று (30/07/2022) நடைபெற்றது. இந்த விழாவில், அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவில், அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் முழக்கம் நடைபெற்றது. அப்போது நடிகர் சத்யராஜும், பேரறிவாளனும் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான, காணொளி ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT