ADVERTISEMENT

'பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல்' -உச்சநீதிமன்றம் உத்தரவு

12:28 PM Nov 27, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்க தமிழக சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், பேரறிவாளனுக்கு மேலும் பரோல் காலம் நீட்டிக்கப்படமாட்டாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஏற்கனவே ஒரு வாரம் பரோல் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT