ADVERTISEMENT
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று (03.02.2023) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments