ADVERTISEMENT

"மீண்டும் பயணிகள் ரயில் சேவை"- தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

08:14 PM May 18, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில பயணிகள் ரயில்கள், மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 30- ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து காலை 06.35 மணிக்கு ராமேஸ்வரத்திற்கும், மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மதுரைக்கும் ரயில் இயக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காலை 07.10 மணிக்கு நெல்லைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 06.45 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

அதேபோல், மே 23- ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு கோவைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 03.45 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் ரயில் சேவைத் தொடங்குகிறது. மே 30- ஆம் தேதி முதல் நெல்லையில் இருந்து மாலை 06.15 மணிக்கு செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து காலை 06.40 மணிக்கு நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவில்லா விரைவு ரயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT