இதனையடுத்து விஜயகாந்த் பூரண குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மூத்த மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். அதில் ‘மருத்துவ பரிசோதனையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த்ஹ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
இதையடுத்து, உயிரிழந்த விஜயகாந்தின் உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, விஜயகாந்த் வீட்டின் முன்பு உள்ள தேமுதிக கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது