ADVERTISEMENT

கட்சிக்கான அறிவிப்பு குறித்து முடிவு?- நாளை மறுநாள் நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்  

07:49 PM Mar 03, 2020 | kalaimohan

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாகவும், அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT