ADVERTISEMENT

மாணவர்களின் பெற்றோர் வாட்சப் குழுவில் ஆபாசப்படம் - போலீசார் விசாரணை

01:05 PM Dec 17, 2019 | rajavel

ADVERTISEMENT

மாணவர்களின் பெற்றோர்களுக்கான வாட்சப் குழுவில் ஆபாச படம் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ADVERTISEMENT



கன்னியாகுமரியில் அகதீஸ்வரம் அடுத்த கொட்டாரம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வருகிறார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஏற்படுத்தினார். அதன்படி மாணவர்களின் செயல்பாடுகளை அந்த குரூப்பில் உள்ள பெற்றோர்களுக்கு தெரிவித்து வந்தார்.


இந்த நிலையில் இந்த வாட்ஸ் அப் குரூப்பிற்கு மாணவனின் ஒருவரின் தந்தை எண்ணில் இருந்து ஆபாச படம் ஒன்று வந்துள்ளது. இதனை பார்ந்த அந்த குரூப்பில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து டியூசன் ஆசிரியர் செல்வக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து கன்னியாகுமரி காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரையடுத்து கன்னியாகுமரி காவல்துறை போலீசார், ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT