ADVERTISEMENT

பாக்கெட் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது

05:04 PM Jan 31, 2019 | sekar.sp



விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டு சாலையில் விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் சேதுராமன் மற்றும் தலைமை காவலர் ஷபி, அன்வர் ஆகியோர்கள் மதுவிலக்கு வேட்டை சம்மந்தமாக 30.01.2019 ந் தேதி இரவு 09.30 மணிக்கு தீவிர வாகன சோதனை செய்தனர்.

ADVERTISEMENT

அப்போது PY 01 Q 1000 என்ற பதிவு எண் கொண்ட இண்டிகா கார் வந்தது. அந்தக் காரில் சுமார் 21,000 ரூபாய் மதிப்புள்ள 300 லிட்டர் பாண்டிச்சேரி மில்லி சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த சரவணன் என்கிற பொக்க சரவணன் மற்றும் திருபுவனையை சேர்ந்த அருள் ஜோதி ஆகிய இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT