ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிரடி... அரசு ஊழியர்கள் இடமாற்றம்..!

05:15 PM Aug 17, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தேர்தல் நடைபெறும் குறிப்பிட்ட அந்த 9 மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக பணியில் இருப்பவர்களை வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் விரைவில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. தொகுதி வரையறை பிரச்சனை காரணமாகக் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போது இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT