கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவுறுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தவிர்க்க வேண்டும். தமிழக எல்லைகளில் உள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, நெல்லை, விருதுநகர், ராணிப்பேட்டை, ஈரோடு, தேனி உள்பட 16 மாவட்டங்களில் வணிக வளாகங்கள் மற்றும் தியேட்டர்களை மார்ச் 31- ஆம் தேதி வரை மூட உத்தரவு. கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் செல்ல வேண்டாம்.
வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 60 கோடி நிதி ஒதுக்கீடு. அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூபாய் 60 கோடி நிதி ஒதுக்கீடு. அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments