ADVERTISEMENT

“30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுகதான்” - ஓ.பி.எஸ்

10:36 AM Aug 29, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இணைந்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள , பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டி ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேடசந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து இணைந்தனர்.இதில் ஆத்தூர் தொகுதியில் இருக்கும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன், பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம், நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்

இதில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும் போது, “முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்ததோடு, அதிமுக 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த உரிமை பெற்றிருக்கிறது. அதேபோல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 30 ஆண்டு ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுகதான்,அந்த அளவுக்கு வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறோம். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதாவும் தான் காரணம். ஜெயலலிதா பொறுப்பேற்ற போது 15 லட்சமாக இருந்த தொண்டர்களின் இயக்கத்தை , கடந்த 30 ஆண்டுகளாக பொதுச் செயலாளராக இருந்து கொண்டு அத்தனை வேதனை சோதனைகளையும், எதிர்க்கட்சிகளில் அரசியல் சூழ்ச்சிகளையும், முறியடித்து இன்றைக்கு ஒன்றைக் கோடி தொண்டர்களின் இயக்கமாக அதிமுக இருக்கிறது. அதிமுகவினரை பொறுத்தவரை எந்த ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். அது போல் ஆட்சியில் இருந்தால் கூட அதிகாரமும் அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள். அதனால் தான் கட்சி இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT