ADVERTISEMENT

ஜெ .நினைவிடத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் மலர்தூவி மரியாதை!!

11:27 AM Dec 05, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு மெரினாவில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நோக்கி அதிமுக தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

இந்த அமைதிப் பேரணியை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தலைமையேற்று முன்னிலைபடுத்தி நடத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் வாலாஜா சாலையிலிருந்து மெரீனாவிலுள்ள ஜெ.நினைவிடம் நோக்கி பேரணியாக நடந்து சென்றனர்.

பின் நினைவிடம் வந்தடைந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதன்பின் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT