மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஐயிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.

Advertisment

DMK to report to CBI on Madhusudhanan

திருப்பரங்குன்றம் தேர்தலில் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக வைக்கப்பட்டதாக சரவணன் எம்எல்ஏ புகார் தெரிவித்திருந்ததை அடுத்து அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ் ஆகியோர் மீதும் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த நிலையில் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தற்போது திமுக சார்பில் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.