ADVERTISEMENT

தாயின் கால்களைப் பற்றிக்கொண்டு அழுத ஓபிஎஸ்

04:50 PM Feb 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாயாரின் மறைவு செய்தியறிந்து இல்லத்திற்குச் சென்ற ஓபிஎஸ் அவரது தாயின் கால்களைப் பற்றிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதார். ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்கள் பலரும் அவரது இல்லத்திற்கு வந்திருந்தனர். உடன் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT