ADVERTISEMENT

இந்த இரண்டு நாட்கள் மட்டும் வேட்புமனு கூடாது... தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

07:01 PM Apr 25, 2019 | kalaimohan

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22 தொடங்கும், ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாள், ஏப்ரல் 30 வேட்புமனு மறுபரிசீலனை, மே 2 வரை வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம், மே 19 வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கை என தேர்தல் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் ஏப்ரல் 27 ல் வங்கிகளுக்கு 4 வது சனிக்கிழமை விடுமுறை, அதேபோல் ஏப்ரல் 28 ஞாயிறு விடுமுறை எனவே இந்த இரண்டு நாட்கள் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் வேட்புமனு பெறக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT