ADVERTISEMENT

சிறுமிகள் முதல் திருமணமான பெண்கள் வரை பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்

05:29 PM Oct 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் டைப்பிங் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்கு வரும் சிறுமிகள், பள்ளி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் எனப் பலரிடம் டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுப்பது போல் பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அவர்களின் அங்கங்களைத் தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததாகத் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு புகார் வந்தது.

அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி இந்த சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT