ADVERTISEMENT

போக்சோவில் முதியவர் கைது

03:13 PM Sep 10, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 57 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அடுத்துள்ள குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான ஜெயக்கொடி(ஆண்) என்கிற முதியவர், அதே பகுதியைச் சேர்ந்த வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் முதியவர் ஜெயக்கொடியை போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து முதியவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT