ADVERTISEMENT

விஜயபாஸ்கருக்கு சொந்தமான தி.நகர் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்! (படங்கள்)

11:14 AM Oct 18, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ADVERTISEMENT

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், சென்னை தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவில் 5/3 எண் கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சுமார் 15 கோடி மதிப்புள்ள வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், அந்த வீட்டில் சோதனையை நிறைவுசெய்து அதிகாரிகள் வெளியே வருவதைக் காண முடிகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT