ADVERTISEMENT
இன்று தேசிய பத்திரிகை தினம். பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட நாளான நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அண்மையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகை தின வாழ்த்துகளை தெரிவித்தார். அதில் பத்திரிகை என்பதற்கு பதிலாக பத்திரிக்கை என்று உள்ளது. பத்திரிகை என்றால் மட்டுமே ஊடகங்கள், செய்தித்தாள்கள், இதழ்கள் போன்றவற்றை குறிக்கும். பத்திரிக்கை என்றால் கல்யாண பத்திரிக்கையை குறிக்கும். துணை முதல்வரின் இந்த ட்வீட் பத்திரிகையாளர்கள் பலரை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments