ADVERTISEMENT
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று (14.01.2024) விலகியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (14.01.2024), நாளையும் (15.01.2024) வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ADVERTISEMENT
அதே சமயம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments