Chance of rain in 10 districts of Tamil Nadu

Advertisment

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கும், கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.