ADVERTISEMENT

'வெளிப்படைத்தன்மை இல்லை...' - 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை! 

11:02 AM Apr 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என தகவல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தலைமைச் செயலருக்குப் பரிந்துரை அளித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை, கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்த 9 அதிகாரிகளைக் கட்டாய பணி ஓய்வில் அனுப்ப தகவல் ஆணையர் தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரைந்துள்ளார்.

கட்டாய பணி ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள்: சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர், ககர்லா உஷா, ஜெகன்நாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT