ரஜினி, கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உ.வே.சாமிநாதையர் எனப்படும் உ.வே.சா. அவரது 164-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
ஆந்திராவில் ஏரியில் மிதந்த தமிழர்களின் சடலங்கள் குறித்து தடயவியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. ரஜினி, கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. எந்த மாற்றமும் ஏற்படாது.
ரஜினி, கமல் சந்திப்பு ரூஸ்வெல்ட் – வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு போல் பெரிதுபடுத்தப்படுகிறது. காவிரி தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தால் எதையும் சாதித்துவிட முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments