Skip to main content

ரஜினி - கமலோடு சேரப்போகும் புதிய கட்சிகள்... திமுக, அதிமுக அதிர்ச்சி 

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

 

கமல் 60 நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அரசியலில் அதிசயம் நிகழும் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். நட்பை விட தமிழர்களின் நலன்தான் முக்கியம், தேவைப்பட்டால் ரஜினிகாந்துடன் இணைவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். இதையடுத்து ரஜினியும், கமலும் இணைந்து தேர்தலை சந்திப்பார்களா என்று தமிழக அரசியலில் பெரும் விவாதம் எழுந்தது.  

 

rajini-kamal-tamilnadu


 

இந்த விவாதம் அடங்குவதற்குள் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், கமல்ஹாசனுடன் நீங்கள் இணைந்து செயல்படுவேன் என கூறி உள்ளீர்கள் அப்படி இணைந்தால் யார் முதல்வர்  வேட்பாளர் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், கமலுடனான கூட்டணி என்பது குறித்து  தேர்தல் நேரத்தில்,  அப்போது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு  தகுந்தவாறு எடுக்க வேண்டிய முடிவு. அப்போது நான் எனது கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி அது குறித்து முடிவு அறிவிப்பேன். அதுவரை இது குறித்து நான் பேச விரும்பவில்லை.
 

தமிழக மண்ணில் ஆன்மீக அரசியலுக்கு இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே என கேட்டதற்கு. 2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை  அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என கூறினார்.


 

 

ரஜினியின் இந்த பேட்டி குறித்து அவரது ரசிகர்கள் கூறும்போது, ரஜினியின் ஆரவாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கமல் ரசிகர்களோடு இணைந்து செயல்படுவதில் எந்த தயக்கமும் இல்லை. ரஜினியோ, கமலோ யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக ஏற்கவும் தயாராக இருக்கிறோம். எங்கள் தலைவர் சொன்னதுபோல 2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றனர். 
 

இதேபோல் கமல் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, அவர்கள் இருவரும் எப்போதும் நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் 40 ஆண்டு காலமாக எந்தவித வேறுபாடும் இல்லாமல்தான் பழகினார்கள். அரசியலுக்கு கமல் வந்துவிட்டார். ரஜினி வரப்போகிறார். இருவருக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. தெளிவாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி, கட்சி எது என்ற புரிதலோடு இருக்கிறார்கள்.  
 

அரசியலில் எப்போதும் வியூகங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்பதால் சில விசயங்களுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார். அவரது திட்டங்கள் அரசியலுக்கு வரும்போது தெரியலாம். நட்பை விட தமிழர்களின் நலன்தான் முக்கியம், தேவைப்பட்டால் ரஜினிகாந்துடன் இணைவேன் என சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இருவருக்கும் நன்றாகவே தெரியும் என்றனர்.
 

ரஜினி - கமல் இணைந்து அரசியல் களத்தில் இறங்குவார்களா என்று சில அரசியல் விமர்சகர்களிடம் நாம் பேசியபோது, இன்றைய காலக்கட்டத்தில் எந்தக் கட்சியும் தனித்து களம் காணுவது என்பது மிகப்பெரிய சவால். இந்த சவாலை எதிர்கொள்ள தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சியும் தயாராக இல்லை. 


 

 

வைட்டமின் 'ப' என்ற பலத்தை தேர்தலுக்கு தேர்தல் களமிறக்கி அசால்டாக வெற்றி பெறும் அனுபவமிக்க அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர். அவர்களை தாண்டி இவர்கள் வர வேண்டும் என்றால் தனித்தனியே நின்றால் முடியாது. இருவரும் ஒன்றாக இணைவதோடு, ஏற்கனவே தமிழக அரசியலில் களம் கண்டவர்களும், எந்த வியூகத்தையும் சமாளிக்கக் தயாராக உள்ளவர்களும் இணைந்தால் ரஜினி - கமல் ரசிகர்களின் ஆசைகள் நிறைவேறும். தற்போது உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலரை ரஜினி ஏற்கனவே சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவர்களும் ரஜினி சொன்ன 2021க்காக காத்திருக்கிறார்கள்.
 

திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற கோபம் இருக்கிறது. தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தாலும், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் வர வாய்ப்பு உள்ளது. இவற்றையெல்லாம் கவனித்து இவர்கள் இருவரும் பயன்படுத்திக்கொள்வதோடு, தேசிய கட்சி ஒன்றையும் இணைத்து தேர்தலை சந்தித்தால் 2021ல் ரஜினி சொன்ன அந்த அற்புதம், அதிசயம் நிகழும் என்றனர். 
 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்