ADVERTISEMENT

என்.எல்.சியில் கொதிகலன் வெடித்து 13 பேர் பலியான விவகாரம்! என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம்!

09:04 PM Jul 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

ADVERTISEMENT

அவர்களில் நெய்வேலி நகரியம் 7-ஆவது வட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் துணை தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் இவர் கடந்த 02.07.2020 அன்றும், இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ் என்பவரும், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவரும் 05.07.2020 அன்றும், நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ஜோதி ராமலிங்கம், இன்ட்கோசெர்வ் தொழிலாளி தொப்புளிக்குப்பம் இளங்கோவன் ஆகியோர் 06.07.2020 அன்றும், நெய்வேலி நகரியம் வட்டம் 29-ஐ சேர்ந்த இன்ட்கோசர்வ் தொழிலாளி ஆனந்தபத்பநாபன் 07.07.2020 அன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதையடுத்து என்.எல்.சி கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே இன்று இதுகுறித்து விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விபத்து தொடர்பாக என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT