ADVERTISEMENT
ADVERTISEMENT
புத்தாண்டையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்டத் தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனைக் குறைந்துள்ளது. கடந்தாண்டு புத்தாண்டுக்கு ரூபாய் 159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூபாய் 147.69 கோடி மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 41.45 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதேபோல், மதுரை மண்டலத்தில் ரூபாய் 27.44 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 26.85 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 26.52 கோடி, சேலம் மண்டலத்தில் ரூபாய் 25.43 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments