குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின் கொடி முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் பெற்றுக் கொண்டது. தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரையிலான காவல்துறையினர் கொடியை இனி தங்கள் சீருடையில் அணியவுள்ளனர்.
அனைத்து காவலர்களுக்கும் பொருத்தும் வகையிலான புதிய இலச்சினையை முதலமைச்சரிடம் குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவருக்கு நினைவுப் பரிசாக சதுரங்க அட்டையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடத்தப்பட்ட கடவுள் சிலைகளை மீட்பதில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்படுகிறது. இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்; ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
விழாவையொட்டி, ராஜரத்தினம் மைதானத்தைச் சுற்றி 200- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.