ADVERTISEMENT

தாகத்தில் தவித்த நாகப்பாம்பு.. தண்ணீர் கொடுத்த கிராம மக்கள்..!

06:59 PM Jun 02, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

4 நாட்களுக்கு முன்னர் கான்ட்ராக்டர் நேசமணி எப்படி சமூக வலைத் தளங்களில் பேமஸ் ஆனோரோ, அதைப் போல இப்போது வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நாகப்பாம்பின் வீடியோ, வலைத் தளங்களில் ட்ரென்ட் ஆகி வருகிறது.

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ளது காஜிவாக்கம். 2 நாட்களுக்கு முன்னர் இந்த கிராமத்திற்குள் வந்த நாகப்பாம்பு, படம் எடுத்து நின்றது. ஒருவேளை வெயிலில் களைப்பாக வந்திருக்குமோ?(!) என்று எண்ணிய அந்த கிராமத்து இளைஞர், பக்குவமாக தனது கைக்கு தடிமனான உறையை மாட்டிக் கொண்டு, எட்ட நின்று தண்ணீர் பாட்டிலை திறந்து பாம்புக்கு நேராக நீட்டினார்.

இதைத் தானடா எதிர்பார்த்து வந்திருக்கிறேன் என அந்த பாம்பும் தண்ணீரை பருகியது. தாகம் தணிந்த பிறகு, வந்த வழியாக காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டது 'நல்ல'பாம்பு. இந்த காட்சியை வேடிக்கை பார்த்த நபர் வீடியோ எடுத்து வெளியிட, இப்போது நாகப்பாம்பு தண்ணீர் குடித்த காட்சிகள் தான் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT