ADVERTISEMENT

அறந்தாங்கியில் செவிலியர் மர்ம சாவு...  சிலமணி நேரத்தில் சிங்கப்பூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

06:37 PM Aug 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் சில வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை செவிலியரை அவரது உறவினர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தூக்கிக் கொண்டு அறந்தாங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்து அவசர அவசரமாக மயானத்திற்கு தூக்கிச் சென்று தகனம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த சிலமணிநேரத்தில் சிங்கப்பூரில் வேலை செய்யும் அறந்தாங்கி புள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் கார்த்திக் தனது சமூக வலைத்தள கணக்குகளில்

'நாங்க ஒன்னு சேரப் போறோம். இனிமேல் எங்களை யாராலும் பிரிக்க முடியாது;
லவ் யூ ஆல், அவ்ளோ தான் எல்லாம் முடிந்தது.. பை'

இப்படி சில ஸ்டேட்டஸ்களை வைத்துள்ளார். கார்த்திக்கை அவரது நண்பர் தொடர்புகொள்ள தொடங்கினார்கள். எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள அவரது தாய் மாமாவுக்கு தான் இருக்கும் இடத்தின் லொக்கேசன் அனுப்பிவிட்டு பீச்சில் தூக்கில் தொங்கி விட்டார். லொக்கேசனை பார்த்து நண்பர்களுடன் சென்ற கார்த்திக்கின் தாய் மாமா சிங்கப்பூர் போலிசாருக்கு தகவல் கொடுத்து சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை முடிந்து பேக்கிங் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கார்த்திக்கின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிங்கப்பூர் போலீசார் மற்றும் தாய்மாமன் கொடுத்த தகவலின் அடிப்படையில் அறந்தாங்கி வட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஆமஞ்சி வட்ட கிராம நிர்வாக அலுவலர் மோகன் செவிலியர் இறந்ததாக கூறப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தபோது செவிலியரான இளம்பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மர்மமான முறையில் இறந்ததும், இறந்த பெண்ணின் உடலை காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் சொல்லாமல் தகனம் செய்துவிட்டதும் தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் இறந்தவர் உடலை யாருக்கும் தகவல் சொல்லாமல் தகனம் செய்த இளம்பெண்ணின் தாய், அண்ணன், அக்கா மற்றும் உறவினர்கள் மீது ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் இளம்பெண் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். அறந்தாங்கியில் செவிலியர் இறந்த சில மணி நேரத்தில் சிங்கப்பூரில் இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT