Skip to main content

18 நாட்களில் 1700  கி.மீ. தூரத்தை கடந்த புறா; தமிழக அளவில் முதலிடம்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

இரு நாடுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொலை தொடர்பு சாதனமாக இருந்தது "தூதுப் புறாக்கள்". கண்டம் விட்டு கண்டம் போய் தகவல்களை கொடுத்து விட்டு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் ஆற்றல் பெற்றது ஹோமர் வகை புறாக்கள். அதன் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் கூட இன்று வரை தூதுப் புறாக்கள் பந்தய புறாக்களாக வளர்த்து மகிழ்கின்றனர் பலர். எந்த ஊரில் கொண்டு போய் விட்டாலும் தன் நுண்ணறிவை பயன்படுத்தி தன்னை வளர்த்த இடத்திற்கே வந்து சேர்ந்து விடுகிறது புறாக்கள்.

 

1918 - 1919 காலக் கட்டத்தில் உலகப் போரில் செமி என்கிற புறா தனது ஒற்றைக் காலை இழந்து சுமார் 2 ஆயிரம் போர் வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த புறாக்கள் இன்று தூது செல்ல பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அதனை வளர்த்து இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காகவே பல கிளப்கள் உள்ளது.

 

சமீபத்தில் டிஆர்பிஎஃப் அமைப்பின் மூலம் டெல்லியில் உள்ள ஜான்சியில் நடந்த புறாப் பந்தயத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை, சேலம் உள்பட பல மாவட்ட கிளப்களில் இருந்து நூற்றுக்கணக்கான புறாக்கள் கலந்து கொண்டது. இதில் தஞ்சை மாவட்ட கிளப்பில் மூலம் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரெத்தினக்கோட்டை முகமது சாதிக் என்பவரின் சுரையா தியாப்ஜி என்ற புறா 18 நாட்களில் 1700 வான்வழி கி மீ தூரத்தை (தரைவழி 2100 கி.மீ) கடந்து இந்தியாவில் 4 வது இடத்தையும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

இது குறித்து சாதனை புறா சுரையா தியாப்ஜியின் உரிமையாளர் ரெத்தினக்கோட்டை முகமது சாதிக் நம்மிடம் பேசுகையில், "நான் 25 வருடமாக புறாக்கள் வளர்க்கிறேன். புறாக்களை வீட்டில் வளர்ப்பது தரித்திரம் என்பார்கள். என்னிடமே பலர் சொன்னார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து பறவைகளையும் போல சுதந்திரமாக தான் வளர்க்கிறேன். 'பரன்பரை லாப்ட்' என்ற பெயரில் பரம்பரையை நினைவூட்டும் வகையில் பறவைகளின் தங்குமிடம் அமைத்திருக்கிறேன்.

 

என்னுடைய புறாக்களுக்கு மறைந்த தேசத் தலைவர்களின் பெயர்களை நினைவு கூறும் வகையில் தான் பெயர்கள் வைத்திருக்கிறேன். இதற்கு முன்பு சுபாஷ் சந்திர போஸ் என்ற புறா 9.45 மணி நேரத்தில் 600 கி.மீ (வான்வழி தூரம்) தூரத்தை கடந்தது. இதே போல பல சாதனைகளை என்னுடைய புறாக்கள் சாதித்துள்ளது. இப்போது வந்த சாதித்துள்ள சுரையா தியாப்ஜி என்ற புறா நமது தேசிய கொடி வடிவமைத்தவர் பெயரை வைத்திருக்கிறேன். இந்த புறா தான் தேசிய அளவில் சாதனை படைத்திருக்கிறது.

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

புறாக்களை வளர்க்க அதற்கென பிரத்யேக உணவுகளை வாங்கி கொடுப்பதில்லை. நம்ம ஊரில் விளையும் சிறு, பெருந் தானியங்களையும், வழக்கமான தண்ணீரும் தான் கொடுக்கிறோம். பிரத்யேக உணவு கொடுக்கும் போது இலக்கை எட்டும் போட்டிக்கு அனுப்பினால் தான் முன்பு சாப்பிட்ட உணவைத் தேடி அலையும். ஆனால் வழக்கமான சிறுதானியம் கொடுப்பதால் பந்தய காலத்தில் இரை தேடி அலையாமல் கிடைத்த இரையை உண்டு கிடைத்த இடத்தில் ஓய்வெடுத்து இலக்கை நோக்கி விரைவாக வந்துவிடும். அப்படித் தான் இந்த சுரையா தியாப்ஜி திட்டமிட்ட பயண நேரம் 21 நாட்கள் என்பதை குறைத்து குறிப்பிட்ட இலக்கான ரெத்தினக்கோட்டைக்கு 18 நாட்களிலேயே வந்து சாதித்துள்ளது.

 

dove competition aranthangi won tamilnadu level state first prize 

 

அதே நேரம் பிரத்யேக உணவு கொடுத்து பழக்கி இருந்தால் அந்த உணவை தேடி திசைமாறி சென்று இருக்கும். போட்டி நடத்தும் நிர்வாகம் தனி ஆப் மூலமே அனைத்தையும் கண்காணிக்கிறது. எல்லையிலிருந்து புறா பயணம் தொடங்கும் முன்பு காலில் ஒரு வளையம் அணிவித்து வெளியே ஒரு குறியீடு, உள்ளே ஒரு ரகசிய குறியீடு வைத்திருப்பார்கள். அதே போல சிறகிலும் குறியீடுகள் எழுதி வைத்திருப்பார்கள். முதலில் ஒரே மூச்சாக 300 வான்வழி கி மீ தூரம் பறக்கும் புறா பிறகு தொலைவை நுண்ணறிந்து உடலை சரி செய்து கொண்டு பயண தூரத்தை குறைத்துக் கொள்ளும். ஒரு நாள் முழுவதும் உணவு, தண்ணீர் இல்லாமல் பறக்கும் அடுத்தடுத்த நாட்களில் கிடைக்கும் உணவு, தண்ணீர் உண்பதுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓய்வெடுத்து பிறகு பறக்கும்.

 

தான் வளர்ந்த இடம் வந்தடைவதே இலக்கு. அங்கு வந்ததும் புறா சிறகில் உள்ள குறியீடு, கால் வளையத்தில் உள்பக்கம் வெளிப்பக்கம் உள்ள குறியீடுகள், புறாவின் நிறம் போன்றவற்றை படங்கள், வீடியோ எடுத்து போட்டி நிர்வாகத்திற்கும், அதற்கான ஆப்பிலும் அனுப்பிய பிறகே தேர்வு செய்வார்கள். ஒரு இடத்தில் குஞ்சாக வளர்க்கப்படும் புறா வேறு எந்த தேசத்தில் கொண்டு போய் விட்டாலும் பறந்து வந்துவிடும். அந்த அளவிற்கு நுண்ணறிவு அதிகம். சாதனைப் புறாக்களை ஆசைப்பட்டு வாங்கிட்டு போனாலும் கூட எத்தனை ஆண்டுகள் ஆனால் பழைய இடத்திற்கே வந்து விடும். இந்த புறாக்களின் பிறப்பிடம் இந்தியா தான் என்றாலும் இங்கிருந்து வெளிநாடு போய் அங்கிருந்து நாம் வாங்கி வருகிறோம். அழிந்த இனங்களை மீட்கும் முயற்சியே என் புறா வளர்ப்பு" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.