ADVERTISEMENT

டூவீலர்களை திருடிச் சென்ற மர்ம கும்பல்; 4 பேர் சிறையிலடைப்பு

08:28 PM Jun 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் வசந்தபுரம் பகுதியில் பச்சையப்பன் மற்றும் சுதாகர் ஆகியோரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டூவீலர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து வாகன உரிமையாளர்கள் இருவரும் தனித்தனியே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம் (Control Room) மூலம் சுமார் 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் டூவீலர்களை திருடிய கும்பல் குறித்து அடையாளம் காணப்பட்டது.

பின்னர் டூவீலர்களை திருடிச் சென்ற அரவிந்தன்(20), சந்தோஷ்(23), பிரதீப்(23), சுல்தான்(18) ஆகியோரை தடாலடியாய் கைது செய்து டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT