2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா இன்று (20/11/2021) மாலை 05.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் யாராலும் மறக்க முடியாது; அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் டோனிதான். சாதாரண பின்புலத்துடன் உச்சம் தொட்ட டோனி ஒவ்வொரு தமிழரின் மனதிலும் இருக்கிறார். நீங்கள் உங்கள் விளையாட்டைத் தொடருங்கள்; நாங்கள் எங்கள் மக்கள் பணியைத் தொடருகிறோம். ஐபிஎல் போட்டிகளில் இன்னும் பல சீசன்களில் டோனி விளையாட வேண்டும்." இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.