ADVERTISEMENT

முல்லை பெரியாறு: 9ஆம் தேதி அதிமுக போராட்டம்!

11:39 AM Nov 02, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பை அதிகரிக்கக் கோரி வரும் 9ஆம் தேதி 5 மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், சில காரணங்களால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும், அணை பலவீனமாக இருக்கிறது, உடைய வாய்ப்பிருக்கிறது போன்ற அவதூறுகளைக் கேரளாவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும், கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கி வைக்காமல் உள்ளது. இந்நிலையில், 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று கோரி அதிமுக வரும் 9ஆம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT