முல்லை பெரியாறு அணைக்கு மாறாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா பல வருடங்களாக சொல்லி வருகிறது. கேரளாவில் இந்த வருடம் நடந்த வெள்ளத்திற்கும் பெரியாறு அணையில் இருந்து வெளியான நீரும் ஒரு காரணம் என்றது.
தற்போது புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கேரள அரசுக்கு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் நடத்த மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.