கரூர் நீதிமன்றத்தில் நள்ளிரவில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன். இந்த நிலையில் நீதிபதி வீட்டில் ஆஜராக வந்த முகிலனை வீடியோ, போட்டோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை 100 மீட்டர் முன்னதாக பேரிகேட் கொண்டு தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
என்ன நடக்கிறது? நாம் எந்த நாட்டில் இருக்கிறோம். மக்களுக்காக போராடியது பெரிய குற்றமா? கொலை செய்து கொள்ளையடித்தவர்ளை எல்லாம் விட்டு விடுகிறார்கள்.
அவர் போல் இனிமேல் யாரும் போராட்டத்திற்கு வரக்கூடாது என்று அவர் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். நான் கூட அவரை சந்தித்துப் பேச அனுமதிக்கவில்லை. முப்பது நாற்பது போலீசார் சுற்றி நின்று கொண்டு எங்களை பேச அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என்று கதறினார்.