ADVERTISEMENT

பெற்ற தாயைக் கொன்ற சிறுமி! ஆண் நண்பர்கள் சகவாசம் காரணமா?

03:48 PM Mar 28, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடசாமி (41). இவரின் மனைவி முனியலட்சுமி (39). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். இதில் தம்பதியரின் மூத்த மகளான 17 வயது சிறுமி தூத்துக்குடி பாலி டெக்னிக்கில் முதலாமாண்டு பயின்று வருகிறார். 17 வயது சிறுமியும் முனியலட்சுமியும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மாடசாமி மற்ற மூன்று பிள்ளைகளுடன் தனது மாமியார் வீட்டினருகே வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 17 வயது சிறுமி, தனது தாய் முனியலட்சுமியை யாரோ 4 பேர் வந்து கொலை செய்து விட்டுத் தப்பியோடியிருக்கிறார்கள் என்று சர்வ சாதாரணமாக சலனமில்லாமல் தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த டவுண் டி.எஸ்.பி. கணேஷ், தென் பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உள்ளிட்ட போலீசார், கொலையுண்டு கிடந்த முனியலட்சுமியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது மகள் 17 வயது சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமியோ முன்னுக்குப் பின் முரணாக சந்தேகப்படும்படியாக பதிலளித்திருக்கிறார்.

இதில் சந்தேகமடைந்த போலீசார், 17 வயது சிறுமியிடம், சற்றுக் கறாராக விசாரித்தபோது அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. கணவரைப் பிரிந்த முனியலட்சுமி தன் மகள் 17 வயது சிறுமியோடு வசித்து வந்தாலும், அவருக்கு வேறு ஒரு நபருடன் முறையற்ற தொடர்பு ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வசித்திருக்கிறார். தன் 17 வயது மகளுக்கு வேறு ஆண் நண்பர்கள் சகவாசம் உண்டு என்பதையறிந்த முனியலட்சுமி, பிற நபர்களுடன் அவளை பாலியியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியிருக்கிறாராம்.

இதில் ஆத்திரம் அடைந்த சிறுமி, தன் ஆண் நண்பரான முத்தையாபுரம் கண்ணன் (22) என்பவரிடம் தெரிவித்திருக்கிறார். இதன் பின் கண்ணன் தனது சகாக்களான கோடாங்கி என்ற முத்து (25), தங்ககுமார் (28) ஆகியோருடன் சேர்ந்து முனியலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து முனியலட்சுமியின் கழுத்தை துணியால் இறுக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர் என்று சிறுமி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறாராம். இதன் பிறகே 17 வயதான சிறுமி அவரது ஆண் நண்பர் கண்ணன் இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT