ADVERTISEMENT

தாய் மற்றும் மகள் கொடூரமாக வெட்டிப் படுகொலை...! காவல்துறை விசாரணை!

12:25 PM Mar 02, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. கணவனை இழந்த இவரும், அவரது மகள் மாதங்கி என்கிற சந்தியாவும் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடிக்கு உட்பட்ட இடையார்பாளையம் பகுதியில் உள்ள அவர்களது விவசாய நிலத்திற்கு அருகே படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தனர்.

அவ்வழியாக சென்றவர்கள் இருவரின் சடலத்தைப் பார்த்து, ரெட்டிச்சாவடி போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீஸ் குழு, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் தலை, முகம், கை என பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், மோப்பநாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. முதற்கட்ட தகவலில், சொத்துப் பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஆனால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சொத்து பிரச்சினைகள் அல்ல என உறுதியாக கூறுவதால், கொலை நடந்ததற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT