ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை அருகே ஆவடியில் தலையில் கல்லை போட்டு தாயும், குழந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ஆவடி நரிக்குறவர் காலனியில் ரோஜா என்ற பெண்ணும், 3 வயது பெண் குழந்தையான சுஜாதாவும் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ரோஜாவின் கணவர் அருண்பாண்டியன் வியாபாரத்திற்கு சென்ற நிலையில் தாயும் மகளும் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடலை கைப்பற்றிய ஆவடி போலீசார் இந்த கொலை செய்தது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ADVERTISEMENT
Show comments