நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நாடுமுழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று தேனி, ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மதுரை வந்தடைந்தார் மோடி. கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து தனி விமானம் மூலம் இரவு 9.50 க்கு மதுரை வந்தடைந்த மோடியை அதிமுக நிர்வாகிகள் மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வரவேற்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மோடியை வரவேற்றத்துக்கு பிறகு செய்தியாளகர்ளை சந்தித்த ஓபிஎஸ் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
அதேவேளையில் நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள சொகுசு தங்கும் ஹோட்டலான தாஜ் ஹோட்டலில் தங்குவதற்காக வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்டிய ஏழு தமிழர் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேச இயக்கத்தை சேர்ந்தவர்களான மாரி மற்றும் அந்தோணியை கைது செய்துள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
Show comments