ADVERTISEMENT

திருநங்கைகளால் தொடங்கப்பட்ட நடமாடும் உணவகம்..! எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நேரில் வாழ்த்து..! 

02:34 PM Jul 31, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் ஒன்றிணைந்து மாலைநேர நடமாடும் உணவகம் ஒன்றைத் திறந்துள்ளனர். ஆறு திருநங்கைகள் ஒன்றிணைந்து புதிய முயற்சியாக உணவகங்கள் திறந்து, ஒரு புதிய தொழிலைக் கையில் எடுத்திருப்பது பலரால் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேவேளையில், இத்திருநங்கைகளின் சமையலில் புதிய உணவு பதார்த்தங்களின் சுவை பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் புதிய உணவகம் திறந்துள்ள திருநங்கைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, “எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்” என்று உறுதியளித்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT