ADVERTISEMENT

"பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

02:39 PM Jan 18, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதில், அந்தந்த மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் அமைந்திருக்கும். அந்தவகையில் இந்தாண்டுக்கான அலங்கார ஊர்தியை தமிழ்நாடு அரசு உருவாக்கியிருந்தது. ஆனால், மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.


தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் பேச வேண்டும். அப்படிப் பேசினால் இதில் நல்ல முடிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT