அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் காலமானார்.அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி நேரில் அஞ்சலி செலுத்தி, ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினர். அந்த வகையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்தச் சந்திப்பின்போது, மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தைமியா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
ஓ.பி.எஸ்.க்கு நேரில் ஆறுதல் கூறிய தமிமுன் அன்சாரி..
Advertisment