ADVERTISEMENT
இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
ADVERTISEMENT
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு விரைவில் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கணக்கெடுக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. எனவே தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments