ADVERTISEMENT
ADVERTISEMENT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். ஆபாச படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர தயாராக உள்ளது".இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Show comments