ADVERTISEMENT

"ஸ்டாலினின் போராட்ட அழைப்பு ஒரு அரசியல் நாடகம்!" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

02:52 PM Oct 22, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க அரசுடன் சேர்ந்து போராடத் தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: கருத்துத் தெரிவிப்பது கூட்டணிக் கட்சியினரின் உரிமை. ஆந்திர மாநிலத்தோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பல்வேறு திட்டங்களில் முன்னோடியாக உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது முதலமைச்சரின் முயற்சியால் தான். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரின் ஆளுநரைச் சந்தித்தோம்; ஆளுநர் நல்ல முடிவைத் தெரிவிப்பார் என நம்புகிறோம். இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கக் காலம் தேவைப்படும்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து போராடத் தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT