ADVERTISEMENT
ADVERTISEMENT
இன்று (1.12.2001) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், வாளவந்தான்கோட்டையில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 433 குடும்பத்தினருக்குப் பாத்திரம், துணிகள் மற்றும் இலவச எரிவாயு இணைப்பு ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு,இ.ஆ.ப., திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கே.எஸ்.எம். கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Show comments