ADVERTISEMENT

தஞ்சையில் ‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா’ கண்காட்சியை துவக்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் 

11:39 AM Apr 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில், 75வது சுதந்திர தின ஆண்டு ‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா’ எனும் தலைப்பில் கொண்டாடப்பட்டுவருகிறது.


இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் ‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா’ கண்காட்சியினை அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

இதில், அனைத்து அரசு துறைகள் சார்பாக கண்காட்சி அரங்குகளும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும் அணிவகுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அரசுத் துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT